அக்.20-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: மீராகுமார் அழைப்பு


அக்.20-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: மீராகுமார் அழைப்பு

புதுதில்லி: மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றுக்கு அக்டோபர் 20-ம் தேதி அழைப்பு விடுத்துள்ளார் மக்களவைத் தலைவர் மீரா குமார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

இவற்றை முன்னிட்டு நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மீரா குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)