ஆந்திரா: திருமண கோஷ்டியினர் மீது லாரி மோதி 16 பேர் பலி


ஆந்திரா: திருமண கோஷ்டியினர் மீது லாரி மோதி 16 பேர் பலி

image

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர்கள் மீது, இன்று அதிகாலை மரம் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

2 டிராக்டர்களில் திருமண கோஷ்டியினர் இருந்தனர். இந்த டிராக்டர்கள் மீது, லாரி ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், 10 பேர் சம்பவ இடத்திலும், 6 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காயம் அடைந்த ஏனையவர்கள் ஹூசராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)