இந்திய திரைப்பட விழா இலங்கையிலா: வைகோ ஆவேசம்


இந்திய திரைப்பட விழா இலங்கையிலா: வைகோ ஆவேசம்

image

இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழர்களின் மரணபூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைபாதகன் ராஜபக்சே ராஜாங்கம் நடத்தும் தலைநகர் கொழும்பில், ஜூன் மாதத்தில், சர்வதேச இந்தியத்திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்றனர்.
 
லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும் வீசும் காற்றையே ஓலக்காற்றாக ஆக்கிவிட்ட நிலையில், சர்வதேச இந்தியத்திரைப்பட அமைப்பின் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்தது கண்டனத்துக்கு உரியது.
 
தமிழகத் திரைப்படத்துறையைச் சேர்ந்த எவரும் அதில் கலந்துகொள்ளக் கூடாது என்பதோடு, இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)