உண்ணாவிரதத்தை முடித்தார் பாபா ராம்தேவ்


உண்ணாவிரதத்தை முடித்தார் பாபா ராம்தேவ்

image

ஊழல் மற்றும் கறுப்புப் பணம் தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ கடந்த 9 நாட்களாக மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை இன்று முடித்துக் கொண்டார்.

டேராடூன் மருத்துவமனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் சில ஆன்மீக தலைவர்கள் ராம்தேவிற்கு பழச்சாறு வழங்கி, உண்ணாவிரத்தை நிறைவு செய்து வைத்தனர்.

ராம்தேவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால், டேராடூன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனுக்காக, தமது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்குமாறு அரசை தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

பாபா ராம்தேவ் எழுப்பியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்கனவே நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சூர்ய காந்த் தாஸ்மனா தெரிவித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)