உலக செஸ் : ஆனந்த் மீண்டும் தோல்வி


உலக செஸ் : ஆனந்த் மீண்டும் தோல்வி

image

சோபியா: பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2-வது முறையாக தோல்வியடைந்தார்.

இந்தப் போட்டியில் பல்கேரியா நாட்டு வீரர் வாசலின் டபலோவ் - இந்தியாவின் ஆனந்த் இடையே ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய ஆனந்த் 56-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவருக்கு இது 2-வது தோல்வியாகும்.
 
இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இருவரும் 4-4 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகிக்கிறார்கள். இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. 9-வது சுற்று நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)