ஐபிஎல்-க்கு எதிராக போர்க்கொடி


ஐபிஎல்-க்கு எதிராக போர்க்கொடி

ஐதராபாத், ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வெங்கடரெட்டி ஐபிஎல் அமைப்புக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளார்.

தெலுங்கானா பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் ஐதராபாத்திலிருந்து மாற்றப்பட திட்டமிடப்பட்டதையடுத்து அவர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐபிஎல் அமைப்புக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெலுங்கானா பிரச்சனை காரணமாக ஐதராபாத்திலிருந்து போட்டி மாற்றப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

ஐதராபாத்தில் விளையாடுவது பாதுகாப்பானது என்று கூறியுள்ள அவர், ஒருவேளை ஐதராபாத்தில் போட்டிகள் நடைபெறாவிட்டால் டெக்கான் அணி ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)