காந்தி சிலை சேதம்: தங்கபாலு கண்டனம்


காந்தி சிலை சேதம்: தங்கபாலு கண்டனம்

கோவை காந்தி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை நகரின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சமூக விரோதிகள் சிலரால் நடத்தப்பட்டுள்ள இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்று சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர்களின் சிலைகள் தேச விரோதிகளால் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகளை உயர்ந்தபட்ச தண்டனைக்குரிய கடுமையான குற்றப்பிரிவுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், இந்தச் செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாவண்ணம் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தங்கபாலு அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)