கிரிக்கெட் அணி ஏலம் : பவாருக்கு எதிர்ப்பு முற்றுகிறது


கிரிக்கெட் அணி ஏலம் : பவாருக்கு எதிர்ப்பு முற்றுகிறது

ஐ.பி.எல்., கிரிக்கெட்  புனே அணி ஏல விவகாரத்தில்  தங்கள் குடும்பத்திற்கு எந்தவித  தொடர்பும் இல்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ., கோரிக்கை வைத்திருக்கிறது. மீண்டும் கிரிக் கெட் ஏல விவகாரப் புயல் எழுந்திருப்பதால்,  அவரது  அமைச்சர் பதவி குறித்து சர்ச்சை  எழுந்திருக்கிறது.

ஐ.பி.எல்., கொச்சி அணி ஏலம் தொடர்பாக, மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், ஐ.பி.எல்., தலைவர்  லலித் மோடிக்கும் மோதல் வெடித்தது. இதையடுத்து, சசி தரூர்  தனது  அமைச்சர் பதவியை இழந்தார். ஐ.பி.எல்., விவகாரத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அதன் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடியை, பி.சி.சி.ஐ., சஸ்பெண்ட் செய்தது. அந்த விவகாரம் குறித்து விசாரணையும் நடக்கிறது.

இந்நிலையில், இந்த ஏல  விவகாரத்தில், தங்கள் குடும்பத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்  அமைச்சர் பவார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)