தமிழகத்தில் சூடுபிடித்தது தேர்தல் களம்


தமிழகத்தில் சூடுபிடித்தது தேர்தல் களம்

தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து விட்டது. மாநிலம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேர்கொண்டிருக்கிறார்கள். 

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்து, மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல்வேறு இடங்களிலும் பிரசாரம் செய்து வருகிறார்.

திமுக ஆட்சி நிறைவேற்றியுள்ள நலத்திட்டங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பலரும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், மாற்றம் வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். அது எந்த வகையிலான மாற்றம் என்பதை மே 13ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)