தர்மபுரி விபத்து: திருமண கோஷ்டியினர் 17 பேர் பலி


தர்மபுரி விபத்து: திருமண கோஷ்டியினர் 17 பேர் பலி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், வேனில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.

வேன் ஓட்டுனர், டிராக்டர் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது, கேரளாவில் இருந்து வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மணப் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்து குறித்து பாலக்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)