மகளிருக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது-பிரதமர்


மகளிருக்கு அதிகாரமளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது-பிரதமர்

image

மகளிருக்கு அதிகாரம் வழங்க தமது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உறுதிப்பூண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது என்று கூறினார்.

பஞ்சாயத்துகள் மற்றும் நகரசபைகளில் மகளிருக்கான இடங்களை அதிகப்படுத்த வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இதன்மூலம் மகளிருக்கு அரசியல்ரீதியில் அதிக அதிகாரம் வழங்க வழிவகை ஏற்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களவைத் தலைவர் மீராகுமார் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 96 சதவீதம் பேர் அமைப்புசாரா துறைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)