விமானப் படை நிரந்தரப் பணியில் பெண் அதிகாரிகள்


விமானப் படை நிரந்தரப் பணியில் பெண் அதிகாரிகள்

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் போராடி, இந்திய விமானப் படையில் நிரந்தரப் பணியில் பெண் அதிகாரிகள் நியமனத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று பெண் அதிகாரிகள் நியமனத்திற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதாக இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படையின் 22 பெண் அதிகாரிகளும், 30 பெண் ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம், பெண்களை விமானப்படையின் நிரந்தர அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை ஏற்று 22 பெண்களும் விமானப் படையில் நிரந்தர அதிகாரிகளாக பணியமர்த்தப்படுவார்கள் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)